Tuesday, May 10, 2011

அவரவர்க்கான மழை..

தார் காணாச் சாலையில் 
கிணற்றின் அகன்ற வாயில் 
மொட்டை மாடியில் 
தென்னை மரத்தில் 
காக்கைக் கூட்டில் 
கூரையிலாக் குளியறையில் 
மண்சுவரில்
வேய்ந்த தகரத்தில்
சகதியோடும் நேற்றைய ஆற்றில்
நஞ்சு தெளித்த பச்சை வயலில்
அலைவரிசைக் கோபுரத்தில்
பொட்டலில் முளைத்த கட்டடங்களில்
வேலிப் படலில்
ரோஜாத் தொட்டியில்
எச்சில் பாத்திரங்கள் குவிந்த வாசலில்
பண்ணை வீட்டில்
வெட்டவெளி ஊஞ்சலில்
தூரத்து மலையில்
உச்சிப் பாறையில்
பெய்து கொண்டிருக்கிறது
அவரவர்க்கான மழை..!.

No comments:

Post a Comment